Header Ads



இவரைக் கண்டால் உடனடியாக தொடர்பு கொள்ளவும்


மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் நிலோஜ் ரோக்க்ஷன் (வயது 17) என்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக அவரது மாணவனின் பெற்றோர்களால் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


குறித்த மாணவன் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (10) மதியம்  வெளியில் சென்ற நிலையிலேயே இது வரை வீடு திரும்பவில்லை என பெற்றோர்  தெரிவித்துள்ளனர் . 


காணாமல் போன மாணவன் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையில்  உயர் தரத்தில் கல்வி கற்று வருவதாக தெரிய வந்துள்ளதுடன் அவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0774722506 என்ற இலக்கத்துடன் தொடர்புக்கொள்ளுமாறு பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.