Header Ads



பேராதனைப் பல்கலைகழக மாணவன் உயிரிழப்பு


மகாவலி கங்கையில் மூழ்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பேராதனைப் பல்கலைகழக மாணவன்  உயிரிழந்துள்ளார்.


இவ்வாறு உயிரிழந்தவர் பேராதனைப் பல்கலைகழகத்தில் வைத்திய பிரிவில் கல்வி கற்கும் இசுரு மதுஷான் என்பவராவார்.


இவர் கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி மருத்துவப் பயிற்சிகளுக்காக நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்த போது மகாவலி கங்கைக்கு அருகில் உள்ள கல்பொத்தவல பகுதியில் நீராடச் சென்றுள்ளார்.


இதன்போது, இவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பல நாட்களாக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று (4) உயிரிழந்துள்ளார்.

No comments

Powered by Blogger.