Header Ads



அழகான பெண்களை விற்பனை செய்தவர்கள் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டனர்


ஆயுர்வேத மத்திய நிலையங்களை நடத்தும் போர்வையில் அழகான பெண்களை, பணத்துக்கு விற்பனைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், எட்டு அழகிகள் உட்பட, முகாமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம், மஹரகமவில் இடம் பெற்றுள்ளது.  அம்பாறை, இங்கிரிய, இரத்தினபுரி, தமண, நிவித்திக்கல மற்றும் நாவலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட வயதுகளுடைய பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.


மஹரகம வத்தேகெதர மற்றும் பன்னிப்பிட்டிய தெபானம ஆகிய பிரதேசங்களில், ஆயுர்வேத மத்திய நிலையம் எனும் போர்வையில் இந்த ஸ்பா நிலையங்கள் நடத்தப்பட்டுள்ளன.

 

 கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இவ்விரு ஸ்பா நிலையங்களுக்கு எதிராகவும்   தேடுதல் உத்தரவை பெற்றுக்கொண்டே, சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது என மஹரகம பொலிஸார் தெரிவித்தனர் 

No comments

Powered by Blogger.