Header Ads



எனது மகன் தலைமறைவாகவில்லை


தனது மகன் மொஹமட் இஷாம் ஜமால்டீன் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க மாட்டார் என்றும், நாளை பொலிஸில் ஆஜராகப் போவதாகவும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார்.


“என் மகன் தலைமறைவாகவில்லை. செவ்வாய்க்கிழமையோ அல்லது அதற்கு முன்னதாகவோ பொலிஸாரிடம் ஆஜராவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் தலைமறைவாகிவிட்டார் என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது என்பதை பொலிஸார் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என்று முஸம்மில் டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.  


ஹெவ்லாக் டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் முகமது இஷாம் ஜமால்தீனைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


சனிக்கிழமை அதிகாலையில் ஜமால்தீன் பெண்ணைத் தாக்கியதாகவும், குறித்த பெண் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

No comments

Powered by Blogger.