Header Ads



"ஜனாஸாக்களின் புகைப்படங்கள் கொடூரமாக பிரசுரிக்கப்பட்டமை மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும்"


- ஏ.எல்.எம்.ஷினாஸ் -


பெரி­ய­நீ­லா­வணை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மரு­த­முனை பாக்­கி­யத்து சாலிஹாத் வீதியில் வசித்து வந்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த முகம்­மது கலீல் முஹம்­மது றிகாஸ் (வயது 29) மற்றும் முஹம்­மது கலீல் பாத்­திமா பஸ்­மியா (வயது 18) ஆகிய விசேட தேவை­யு­டைய இரு பிள்­ளை­களும் கடந்த (14) வியா­ழக்­கி­ழமை காலை 9.00 மணி­ய­ளவில் தாம் வசித்­து­வந்த வீட்டில் கழுத்து வெட்­டப்­பட்ட நிலையில் ஜனா­ஸா­வாக மீட்­கப்­பட்ட சம்­பவம் குறித்த பிர­தேசம் எங்கும் பெரும் சோகத்­தையும் அதிர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்­தி­யது.


ஜனாஸா நல்­ல­டக்கம்


குறித்த இந்த சம்­ப­வத்தை கேள்­வி­யுற்று வெளி­நாட்டில் பணி­பு­ரிந்த இரு சகோ­த­ரர்­களும் உட­ன­டி­யாக நாட்­டுக்கு திரும்­பி­ய­தை­ய­டுத்து, மறு­தினம் வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையின் பின்னர் பாக்­கி­யாத்­துஸ்­ஸா­லிஹாத் ஜும்ஆ பள்­ளி­வா­சலில் ஜனாஸா தொழுகை நடாத்­தப்­பட்டு மரு­த­முனை அக்பர் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது. இந்த ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்கள் கலந்து கொண்­டனர்.


நல்­ல­டக்­கத்தின் பின்னர் கூடி­யி­ருந்த மக்கள் மத்­தியில் கலா­நிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் (மதனி) ஜனாஸா உரையை நிகழ்த்­தினார். ‘நடக்­கக்­கூ­டாத சம்­பவம் இந்த மண்ணில் நடந்­தே­றி­யி­ருப்­பது எல்­லோ­ருக்கும் கவலை தரு­கி­றது. 


இச்­சம்­ப­வ­மா­னது புரி­யாத புதி­ராக உள்ள நிலையில், சமூ­கத்தின் பல தரப்­பினர் பக்­கமும் விரல் நீட்­டு­வதை தவிர்த்து, பாவங்கள் மன்­னிக்­கப்­பட்ட உள­நலம் குன்­றிய பிள்­ளை­க­ளுக்­காக பிராத்­திப்போம். இறை­யச்சம், இஸ்­லா­மிய செல் நெறிகள் மீறப்­படும் போது உள்­ளங்கள் எவ்வாறு துருப்பிடிக்கும் என்பதற்கு இந்த சம்­பவம் ஓர் எடுத்­து­க்­காட்­டாகும். சமூக ஊடகங்களிலும் சில இணையத்தளங்களிலும் ஜனாஸாக்களின் புகைப்படங்கள் கொடூரமான வகையில் பிரசுரிக்கப்பட்டமை மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாகும். எனவே எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான செயற்­பா­டு­களை இதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். – 


Vidivelli

No comments

Powered by Blogger.