Header Ads



கோட்டாபயவை விரட்டியது தமிழ் - முஸ்லிம் மக்கள்தான் என்பதை ஏற்க முடியாது


கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதிப் பதவியில் இருந்து விரட்டியது தமிழ் - முஸ்லிம் மக்கள் தான் என்பதை ஏற்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் கருத்துக் கூறுகையில்,


"ஜனாதிபதி வேட்பாளருக்குத் தகுதியானவர் ரணில் விக்ரமசிங்கதான். பொருளாதார ரீதியில் வீழ்ச்சிப் பாதையில சென்ற இந்த நாட்டை அவர் மீட்டெடுத்திருக்கிறார். அனைத்துப் பிரச்சினைகளும் மெல்ல தீர்ந்துகொண்டு வருகின்றன.


முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு. இதை நான் ஜனாதிபதி ரணிலிடம் கூறியிருக்கின்றேன்" தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.