Header Ads



தௌபா செய்த ஒருவரின் கவி வரிகள்


எனதிறைவா! நான் சுவனத்துக்கு 

தகுதி பெற்றவவனல்ல...!

நரக பாதாள நெருப்பை தாங்க 

சக்தி பெற்றவனுமல்ல...!

ஆதலால் நீ எனக்கு 

பாவமன்னிப்பை அருள் 

பாலித்து, என் பாவங்களை 

மன்னித்தருள்வாயாக...!

நீ யே பெரும் பாவங்களை 

எல்லாம் மன்னித்தருளும்

மாபெரும் தயாசீலனாவாய்...!


_ அபூ நவாஸ் / அப்பாஸிய பேரரசு கால கவிஞர் 


- ابو نواس / شاعر عراقي من شعراء الدولة العباسية


குறிப்பு:- 


அப்பாஸிட் பேரரச காலத்தில், வாழ்ந்த இவர், குடிகார கவிஞர் என பெயர் பெற்றவர். 


அநாகரீகமாக கவிதைகள் பாடி பாவத்தில் திளைத்திருந்தார். பின்னர் அவர் மனம்மாறி தவ்பா செய்து இந்த கவி வரிகளை பாடியதாக கூறப்படுகிறது.


 Imran Farook


No comments

Powered by Blogger.