Header Ads



வியக்கவைக்கும் விஷயம் என்னவெனில்..


வியக்கவைக்கும் விஷயம்  என்னவெனில், நமது பால்வெளி அண்டத்தில் மாத்திரம் எங்கள் சூரிய குடும்பம் போன்று 200 பில்லியன் விண்மீன் கொத்துக்கள் இருக்கின்றன.


அடுத்து நமது காட்சிக்குட்பட்ட (الكون المرصود- Observable univers) பேரண்டத்தில் மாத்திரம் எமது பால்வெளி மண்டலம் போன்ற சுமார் 2 டிரில்லியன் பால்வெளி அண்டங்கள் இருக்கின்றன. 


எல்லை காண முடியாத பிரமாண்டமான பிரபஞ்ச வெளியில் நமது பால்வெளி மண்டலம் ஒரு சிறிய வலயம் பேன்றுதான் காட்யளிக்கும், அதிலே நமது சூரிய குடும்பம் ஒரு மண் பிடி போன்றே காட்சியளிக்கும். நமது பூமிப் பந்தானது ஒரு மண் துளி போன்றும் காட்சியளிக்காது!


இவைகள் அனைதையும் விட வியப்பில் ஆழ்த்தும் விஷயத்தை பின் வரும் வான்மறை வசனத்தில் காணலாம். 


((அல்லாஹ்வை அவர்கள் மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை; மேலும் மறுமை நாளில் போது இந்த பூமி முழுதும் அவனுடைய கைப்பிடியில் இருக்கும்; அத்தோடு பேரண்டங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டிருக்கும்; அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் மகா தூயவன்.))


📖 அல்குர்ஆன் : 39:67


🏞 நமது பால்வெளியின் அனுமான படம் 

✍ தமிழாக்கம் / Imran Farook

No comments

Powered by Blogger.