Header Ads



அப்பாவி இளைஞர்களின் படுகொலை


 அம்பலாங்கொடை மற்றும் பிடிகல பிரதேசங்களில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நான்கு இளைஞர்களின் சடலங்கள் தற்போது அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர்கள் எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கலகொட பிரதேசத்தினை சேர்ந்த பொடி மண்டிஸ் என அழைக்கப்படும் ஹலம்ப உதேஸ் மதுரங்க மற்றும் தடல்லவைச் சேர்ந்த சிதும் சஞ்சனா ஆகிய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.


பொலிஸ் மா அதிபர் ஆறுதல்

பிடிகல, குருவல பிரதேசத்தில் கடையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களும் அவர்களது வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.


இதேவேளை, பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இன்று உயிரிழந்த கவிஷ்க அஞ்சனாவின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.