Header Ads



ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் இருபெரும் விழாக்கள்


- ஜவ்பர்கான் -


அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் இரு பெரும் விழாக்கள்  ஞாயிற்றுக்கிழமை (03) கிளையின் தலைவா் அஷ்ஷெய்க் ஏ.எம்.ஹாறூன் (றஷாதி) தலைமையில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா அலுவலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றன.


இதன்போது, ஜம்இய்யாவில் இதுவரை தலைவா்களாக, செயலாளா்களாக மற்றும் பொருளாளர்களாகப் சேவையாற்றிய உலமாக்கள் கௌரவிக்கப்பட்டதோடு, 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் பட்டம் பெற்ற ஆலிம்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் இடம்பெற்றது.


ஜம்இய்யாவில் இதுவரை தலைவா்களாக பணியாற்றிய 12 உலமாக்களும், செயலாளா்களாக பணியாற்றிய 17 உலமாக்களும், பொருளாளர்களாகப் பணியாற்றிய 10 உலமாக்களும் இந் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனா்.


இது தவிர, 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் பட்டம் பெற்ற ஆலிம்களும் ஒவ்வொருவராக சுய அறிமுகங்களை செய்து கொண்டனா்.









No comments

Powered by Blogger.