Header Ads



கண்டியில் இப்படியும் நடந்தது


- ம.நவநீதன் -


கண்டி - வத்தேகம நகரில் அமைந்துள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் தனியார் நிலையமொன்றில் பழுதுபார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.


தீயைக்கட்டுப்படுத்த விரைந்து செயற்பட்ட நிலையத்தின் உரிமையாளர் தீக்காயங்களுக்குள்ளானார்.


மேலும் அங்கு கடமை புரிந்த ஊழியர்கள் வேகமாக செயற்பட்டு தீப்பரவாமல் கட்டுப்படுத்தினர்.


இடைநடுவின் செயலிழந்த மோட்டார் சைக்கிளை பழுது பார்க்க வந்தவர்கள் குறிப்பிட்ட நிலையத்தில் நிறுத்தி வைத்து அதனை இயக்க முற்பட்டபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

No comments

Powered by Blogger.