Header Ads



சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணி


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான புதிய கூட்டணியை அடுத்த வாரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


நேற்று (01) இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார்.


பொதுஜன ஐக்கிய முன்னணியின் அரசியலமைப்பு தி
ருத்தம் செய்யப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அதற்கான அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.