Header Ads



பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன், ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை ஆதரிப்பேன் - அலி சப்ரி


- அன்ஸிர் -


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன்  என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.


எனினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, ஆதரிபேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


நாட்டை பொருளாதார ரீதியின் ஜனாதிபதி ரணில் சிறந்த முறையில் வழிநடத்தி வருகிறார்.


தற்போதைய நிலையில், இலங்கைக்கு ரணில் போன்ற ஒரு ஜனாதிபதியே அவசியம். அவரால் பொருளாதார சவால்களை  வெற்றிகொள்ள முடியும். இலங்கை துரித அபிவிருத்திய காணும்.



எனினும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன், எனது சட்டத்தரணி தொழிலை தொடருவேன் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.