Header Ads



பாலஸ்தீனத்திற்கு மீண்டும் நிதியுதவி வழங்குவதாக கனடா அறிவிப்பு


பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிதியுதவியை கனடா மீண்டும் தொடங்கும் என சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஹமட் ஹுசென் தெரிவித்துள்ளார். 


அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்களில் ஏஜென்சியில் சில ஊழியர்கள் ஈடுபட்டதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியதை அடுத்து ஜனவரி மாதம் ஒட்டாவா நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்தது.


“காசாவில் மணிக்கணக்கில் மோசமடைந்து வரும் பேரழிவுகரமான மனிதாபிமான சூழ்நிலையால் கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. உதவி பொதுமக்களை விரைவில் சென்றடைய வேண்டும்” என்று கனடா உலகளாவிய விவகாரங்கள் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.