Header Ads



ஜோர்டானில் 6 ஆவது நாளாக போராட்டம், ஆட்சியாளன் அசைவானா..?


ஜோர்டானின் தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே வெள்ளிக்கிழமை ஆறாவது இரவு இஸ்ரேலுக்கு எதிரான பெரிய அளவிலான போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.


பாலஸ்தீனிய மற்றும் ஜோர்டானியக் கொடிகளை அசைத்து, காசா மீதான போருக்கு மத்தியில் ஜோர்டான் இஸ்ரேலுடனான ¨ சமாதான உடன்படிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது


போராட்டக்காரர்கள் இஸ்ரேலிய தூதரக வளாகத்தை நெருங்க விடாமல் தடுப்பதற்காக கலகத்தடுப்பு பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும்இ பொல்லுகளால் தாக்கியும் மக்களை கலைத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.