Header Ads



6 பேர் கொண்ட ரகசிய, அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதா..?


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல் அமைச்சரவையொன்றை நியமித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நியமிக்கப்பட்ட அரசியல் அமைச்சரவை குழு கடந்த திங்கட்கிழமை இரவு கூடியதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அமைச்சரவையில் இடம்பெறாத ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தேர்தல் திட்டங்களை நிர்வகிப்பதற்காக அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டிரான் அலஸ், ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்சா, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரைக் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்த குழு எதிர்காலத்தில் வாரத்திற்கு ஒருமுறை கூடும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. இந்த ஆறு நபர்களும் சேர்ந்து முடிந்தவரை கள்ள வாக்குகளைச் சேர்த்து யூஎன்பீயை வெற்றி பெற என்ன சூழ்ச்சிகள் செய்தாலும் ஒரு இலட்சம் வாக்குகளையாவது யூஎன்பீ பெறும் என்பதில் எமக்குச் சந்தேகம் தான். பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.