Header Ads



சூடானில் 5 மில்லியன் மக்கள், பட்டினியால் உயிரிழக்கும் அபாயம்


சூடானில் பட்டினியால் மக்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகரித்துள்ளதால், உடனடி உதவிகள் அவசியமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இராணுவம் மற்றும் துணை இராணுவ குழுக்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காரணமாக உணவுப் பொருட்களின் விநியோகம் தடைப்பட்டமையே இதற்கு காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


சுடானில் சுமார் 5 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அறிக்கை வௌியிட்டுள்ளது.


அவர்கள் போஷாக்கு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 3.6 மில்லியன் பேர் சிறுவர்கள் எனவும் 1.2 மில்லியன் பேர் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


பெண்கள் மற்றும் குழந்தைகளே பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 8 மில்லியன் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வௌியேறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அத்துடன், சூடானில் எதிர்வரும் மாதங்களில் பட்டினி நிலை மேலும் அதிகரிக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.