Header Ads



வேலை முடிந்து வீடு திரும்பியபோது, மனைவியுடன் 4 குழந்தைகளும் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டேன்


கனடா தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இலங்கையர்கள் 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத் தலைவரான 34 வயதான தனுஷ்க விக்கிரமசிங்க வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


தான் வேலை முடிந்து வீடு திரும்பிய போது தனது மனைவி உள்ளிட்ட 4 குழந்தைகளும் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டதாக கூறியுள்ளார்.


மேலும் சம்பவத்தின் போது, சந்தேகநபரின் தாக்குதலுக்கு இலக்கான போதிலும் அங்கிருந்த தப்பிக்க முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


கண்ணிலும் ஒரு கையிலும் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.