Header Ads



3 வீட்டோக்களை தொடர்ந்து அமெரிக்கா கொண்டு வரப்போகும் தீர்மானம்


'காசாவில் கிட்டத்தட்ட ஆறு வாரங்களுக்கு உடனடி போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிப்பதற்கு' ஆதரவளிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் வரைவு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளதாக அமெரிக்கா இன்று -06- தெரிவித்துள்ளது.


காசாவில் உடனடி மற்றும் நிரந்தரமான போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானங்களுக்கு எதிராக அமெரிக்காவின் 3 வீட்டோக்களை தொடர்ந்து முன்மொழியப்பட்ட தீர்மானம் வந்துள்ளது. 


அல் அக்ஸா மசூதிக்குள் நுழைவதற்கு இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் மற்றும் வழிபாட்டாளர்களுக்கு எதிரான மீறல்கள் காரணமாக பொதுவாக பாலஸ்தீனம் முழுவதும் வன்முறைகள் அதிகரிப்பதைக் காணணலாமென எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில்  ரமலான் மாதத்திற்கு சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் இச்செயற்பாடு வந்துள்ளது.


No comments

Powered by Blogger.