Header Ads



கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

கனடாவின் ஒன்றாரியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இந்த தீ விபத்து சம்பவம் கடந்த 7ம் திகதி நடந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட நிலையில் அது தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.


இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், ராஜீவ் வாரிகோ (51), அவரது மனைவி ஷில்பா கோத்தா (47) மற்றும் அவர்களது 16 வயது மகள் மகேக் வாரிகோ என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இந்த விபத்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

No comments

Powered by Blogger.