Header Ads



30 இளைஞர்கள் பொலிசாரால் கைது


- ஜவ்பர்கான் -


காத்தான்குடி பொலீஸ் பிரிவிலுள்ள பாலமுனையில்  சட்ட விரோதமாக ஒன்று கூடினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் காத்தான்குடியைச் சேர்ந்த 30 பேர் இன்று(01) வெள்ளிக்கிழமை அதிகாலை பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்


பொலீசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உரிய இடத்துக்கு சென்ற  பொலீசார் இவர்களை  சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலீசார் மேலும் குறிப்பிட்டனர்


கைது செய்யப்பட்டவர்களில் வர்த்தகர்கள் இளைஞர்கள் அடங்குவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர் 


கைது செய்யப்பட்டவர்களில் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான நபரான ஸஹ்றான் காசீமுடன்  தொடர்புடையவர்கள்  என்று சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு ஏற்கனவே விடுவிக்கப்பட்ட நாலு பேர் அடங்குவதாகவும் பொலீசார் தெரிவித்தனர்


சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட  இவர்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இரவில் ஒன்று கூடி  பொழுது போக்குக்குக்காக 304 விளையாடி  வருவது  வழக்கமாகும்.


இந்த வகையில்  நேற்று வியாழக்கிழமை இரவு ஒன்று கூடி இன்று  வெள்ளிக்கிழமை  அதிகாலை வரை 304 விளையாடிக் கொண்டிருந்த போது  அங்கு  சென்ற  பொலிஸார் இவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாகவும் தெரிய வருகின்றது.


இது தொடர்பாக  பொலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments

Powered by Blogger.