Header Ads



காத்தான்குடியில் கைதான 30 பேரும் விடுவிப்பு - 5 சட்டத்தரணிகள் வாதங்கள் முன்வைப்பு


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


இம்மாதம் 2ம் திகதி காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை புர்க்கான் பள்ளிவாயல் வீதியிலுள்ள பின்வளவில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்ததாக சொல்லப்படும் நிலையில் காத்தான்குடி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்த 30 பேரும் நீதவான் நீதிமன்றினால்  இன்று -26- விடுவிப்பு செய்யப்பட்டனர்.


குறித்த வழக்கு இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது போது சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணிகளான முகைதீன் சாலி, நௌசர், நிப்ராஸ், அப்றா, றம்சியா ஆகியோர் ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்தனர்.


இந்நிலையில் குறித்த சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம் எச்.எம்.ஹம்ஸா விடுவிப்பு செய்தார்.

No comments

Powered by Blogger.