Header Ads



JVP யினரை ரணில் மூளைச் சலவை செய்தமையால்தான், அநுரகுமார இந்தியாவிற்கு ஓடியுள்ளார்


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தியை (NPP) மூளைச் சலவை செய்துள்ளார், அதனால்தான் அதன் தலைவர் இந்தியத் தலைவர்களைச் சந்திக்கச் சென்றார் என்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


“இந்திய விஸ்தரிப்பு பற்றி விரிவுரைகள் நடத்தியவர்கள் இன்று இந்திய தலைவர்களை சந்திக்க சென்றுள்ளனர்,” என்று அவர் கிண்டல் செய்தார்,


“பழைய ஆடைகளை அணிந்தவர்கள் இப்போது கோட் சூட் அணிந்துள்ளனர், இதனால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதற்கு காரணம் ரணில் விக்கிரமசிங்க அவர்களை மூளைச்சலவை செய்தமை தான் ” என அவர் தெரிவித்தார்.


“அதானி குழுமத்துடன் வர்த்தக முயற்சிகளில் ஈடுபடுவதற்காக இந்த தலைவர்கள் அரசாங்கத்தை எவ்வாறு விமர்சித்தார்கள் என்பதை நாம்இப்போது கொஞ்சம்  நினைவுகூரலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.


இதேவேளை கடந்த மாதத்தில் சுமார் 200,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர் கூறினார்

No comments

Powered by Blogger.