Header Ads



சஜித் வழங்கிய பணம் திருட்டு


சில நாட்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஆரம்பப் பாடசாலை ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட  100,000 ரூபாய் பணம் பாடசாலை அலுவலகத்திலிருந்து திருடப்பட்ட சம்பவம் குறித்து அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


பெப்ரவரி 23ஆம் திகதி புவக்பிட்டிய தெற்கு ஆரம்பப் பாடசாலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் விஜயம் செய்திருந்த போது 'சக்வல' நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை வழங்கப்பட்டது. 


அலுவலகத்தின் முன்பக்க கதவு மற்றும் அலமாரிகள் அனைத்தையும் உடைத்து பணம் திருடப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபரினால் அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


வகுப்பறையை ஒழுங்கமைப்பதற்காக மாணவர்கள் பாடசாலைக்கு வந்தபோது, ​​அலுவலக கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிபர் மற்றும் ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.