Header Ads



அதீத போதைப்பொருள் பாவனையால் இளைஞன் மரணம்


யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து அண்மையில் விடுதலையான இளைஞன் , அதீத போதைப்பொருள் பாவனையாலையே  உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. 


போதைப்பொருள் தொடர்பான வழக்கொன்றில் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த 26ஆம் திகதி விடுதலையான இளைஞன் செவ்வாய்க்கிழமை (30)  இரவு , வீட்டில் மூச்சின்றி  காணப்பட்டதை அடுத்து , இளைஞனை வைத்தியசாலை வீட்டார் கொண்டுச் சென்ற போது , இளைஞன் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 


அதீத அளவில் போதைப்பொருளை நுகர்ந்தமையாலையே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து  தெரியவந்துள்ளது.   


எம்.றொசாந்த் 

No comments

Powered by Blogger.