Header Ads



சவப் பெட்டியுடன் அதிரடி காட்டிய மேர்வின் சில்வா


முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று (04) மாலை பொரளை மயானத்திற்கு சவப்பெட்டியுடன் சென்றுள்ளனர்.


நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த குழுவினர் பொரளை மயானத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை தடுத்ததால் இரு குழுக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.


எனினும் பாதுகாப்பு அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.