Header Ads



காசா இனப்படுகொலை தடையின்றி தொடருகிறது - மேற்குலகின் பல நகரங்கள் எதிர்ப்புப் போராட்டம்


காசா மீதான இஸ்ரேலிய இனப்படுகொலை தாக்குதல்கள் தடையின்றித் தொடர்கையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்றும், இன்றும்  உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் பேரணிகளில் அணிதிரண்டனர்.


 காசா மீதான் தாக்குதலைக் கண்டித்தும் உடனடியாக போர்நிறுத்தம் கோரியும் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.


அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் இவ்வாறுஆர்ப்பாட்டங்கள் நேற்றும் இன்றும் நடத்தப்பட்டுள்ளன.


அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினால் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 30000 ஆக உயர்ந்தள்ளது. மற்றும் 70000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 

No comments

Powered by Blogger.