Header Ads



அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய கப்பலை, செங்கடலுக்கு அனுப்பிய இலங்கை - அமெரிக்கத் தூதுவர்


ஹவுதி போராளிகளுக்கு எதிரான போரில் இலங்கைக் கடற்படையினர் பங்களிப்பினை வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


செங்கடலில் ஹவுதி போராளிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைக் கடற்படைக் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கடற்படை கப்பல் ஒன்றே இவ்வாறு செங்கடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் என சாங் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.