Header Ads



சனத் நிசாந்தவின் கார் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்


முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் கார் சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (05.02.2024) வெலிசறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.


இதன்போதே சாரதியான பிரபாத் எரங்கவை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


அவரை 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


அத்துடன் எதிர்வரும் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பயணித்த வாகனம், கொள்கலன் பாரவூர்தி ஒன்றுடன் மோதி அண்மையில் விபத்துக்குள்ளானது.

No comments

Powered by Blogger.