Header Ads



கழிப்பறை கட்டணத்தில் மீண்டும் மாற்றம்

கொழும்பு, பெஸ்டியன் மாவத்தையில் உள்ள தனியார் பஸ் நிலையத்தில் கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு அறவிடப்படும் கட்டணத்தில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அங்கு கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் 20 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


இந்த நிலையில், கழிப்பறை கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்தார்.


அதன்படி, கழிப்பறைகளை பராமரிக்கும் தரப்பினருக்கு, உயர்த்தப்பட்ட கட்டணத்தை முந்தைய விலைக்கு மாற்றியமைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


அதன்படி நேற்று பிற்பகல் முதல் 20 ரூபாய் கட்டணம் அறவிடப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


No comments

Powered by Blogger.