Header Ads



அலிசப்ரி ரஹீம் பற்றிய தீர்ப்பு, வெளியாக உள்ளது


தமது கட்சி உறுப்புரிமையை ரத்து செய்து நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கு தடைவிதித்து உத்தரவிடக் கோரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 07ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


குறித்த மனு மீதான விசாரணை கொழும்பு மாவட்ட நீதிமன்றில் இன்று -22- விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி டுபாயிற்கு சென்று மீள நாடு திரும்பிய போது சட்டவிரோத தங்கத்துடன் அவர் கைது செய்யப்பட்டார்.

No comments

Powered by Blogger.