Header Ads



இனிப்பு பண்டத்தில் இறந்த பல்லி - முறைப்பாடு செய்தவர் மீது கடை உரிமையாளரின் சகோதரர் தாக்குதல்


இபலோகம பகுதியில் அமைந்துள்ள, வியாபார நிலையமொன்றில் கொள்வனவு செய்யப்பட்ட இனிப்பு பண்டத்தில் இறந்த பல்லியொன்று காணப்பட்டதை தொடர்ந்து அங்கு அடிதடி நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கடந்த (18) இந்த இணிப்பு பண்டத்தை வாங்கிய நபர் தனது வேலைத்தளத்தில் வைத்து அதனை உண்ண முற்பட்ட போது இறந்த பல்லியை அவதானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


பின்னர் இது தொடர்பில் இபலோகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு (MOH) தகவல் வழங்கியுள்ளார்.


இந்நிலையில் இனிப்பு பண்டத்தை வாங்கிய நபர் வியாபார நிலைய உரிமையாளரின் சகோதரரனினால் தாக்கப்பட்டுள்ளார்..


குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இபலோகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


குறித்த இனிப்பு பண்டத்தை உற்பத்தி செய்த தம்புள்ளை இனாமலுவ பகுதியிலுள்ள பேக்கறி மீது இதற்கு முன்னரும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இபலோகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.

No comments

Powered by Blogger.