Header Ads



காதலர் தினத்தில், இலங்கையில் நிகழ்ந்துள்ள பயங்கரம்


காதலர் தினமான பெப்ரவரி 14ஆம் திகதியன்று பெண்ணொருவர் தன்னுடைய முன்னாள் காதலுக்கு மறக்கமுடியாத வகையில் பரிசு கொடுத்துள்ள சம்பவம் தெற்கில் இடம்பெற்றுள்ளது.


அந்த பெண்  தனது கணவனை அழைத்து தனது முன்னாள் காதலனை நிர்வாணமாக்கி இரண்டு கால்களையும் துண்டித்துள்ளார் என காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தொடநடுவ பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காலி தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்கும் போது, ஹிக்கடுவ களுபே பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடன் காதல் உறவை வளர்த்துக் கொண்டுள்ளார். தொழிற்கல்வியில் பட்டம் பெற்ற பிறகும் அவர்கள் சில காலம் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.


பின்னர் அப்பெண் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்,   அவரது பழைய காதலரும் அவளுடன் உறவைப் பேணி வந்தார். எனினும், முன்னாள் காதலன், அப்பெண்ணுக்கு தொலைபேசி அலைப்பை எடுத்துள்ளார். அவளுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வருவது பின்னாளில் தொல்லையாக மாறியுள்ளதாகவும், அதேவேளை, தனது முன்னாள் காதலனிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை கணவனும் செவிமடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இந்த அழைப்புகளை எப்படி நிறுத்துவது என்று அவரது கணவர் அறிவுறுத்தினார், மேலும் அவர் தனது முன்னாள் காதலனின் தொலைபேசி அழைப்பிற்கு அன்பாக பதிலளித்தார். சரி நீ தாடல்லா கடற்கரைக்கு வா நான் வரேன் அதன்படி தாடல்லா கடற்கரைக்கு வந்ததும் கணவர் குண்டாந்தடியால் அடித்து கால்களை உடைத்துள்ளார். அத்துடன் நிர்வாணமாக்கிவிட்டார். 


32 வயதான ஒருவரே பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். அத்துடன் முன்னாள் காதலன் திருமணம் முடித்தவரா? என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. 


TM

No comments

Powered by Blogger.