Header Ads



மிதக்கும் தங்கம் எனப்படும் திமிங்கல வாந்தியை, விற்க முயன்றவர்கள் பிடிபட்டனர்


மிதக்கும் தங்கம் எனப்படும் சுமார் 3 கோடி பெறுமதியான 4 கிலோ 500 கிராம் திமிங்கல அம்பர் (திமிங்கல வாந்தி) சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய தயாராக இருந்த மூன்று சந்தேக நபர்கள் தெவிநுவர மற்றும் நகுலகமுவ பிரதேசத்தில் மிரிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதேவேளை, சந்தேகநபர்கள் பயணித்த ஜீப் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.