Header Ads



சனத் நிஷாந்தவின் மரணம் விபத்தா..? படுகொலையா..??


மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இந்த மரணம் விபத்தினால் ஏற்பட்டதா அல்லது கொலையா என இன்றுவரை தெளிவாக தெரியவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.


மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவியும் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளார், அவர் விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளார்.


இதன்மூலம், மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துமாறு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.


இது கொலை என நிரூபிக்கப்பட்டால், மரணத்தின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தகுந்த தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.


முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான சனத் நிஷாந்த கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.

No comments

Powered by Blogger.