Header Ads



நாய் குறுக்கே பாய்ந்ததால், பல்கலைக்கழக மாணவன் பலி


யாழ். நீர்வேலியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்.பல்கலைகழக 1ம் வருட கலைப்பிவு மாணவரொருவா் உயி​ரிழந்துள்ளார்.


மானிப்பாய் - பேம்படி பகுதியை சோ்ந்த ரமேஷ் சகீந்தன் (வயது 22) என்ற மாணவனே விபத்தில் உயி​ரிழந்துள்ளார்.


இன்று அதிகாலை (21) தனது வீட்டிலிருந்து நீா்வேலி நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்தபோது வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. 


விபத்தில் காயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்துள்ள சம்பவம் தொடா்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா். 


நிதர்ஷன் வினோத் 

No comments

Powered by Blogger.