Header Ads



காத்தான்குடியில் மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகித்தவன் பிடிபட்டான்


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்யும் நபர் ஒருவரை மஞ்சந்தொடுவாய்  பிரதேச பள்ளிவாயல்கள் வழங்கிய தகவலை அடுத்து காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிஎஸ்பி பண்டார தெரிவித்தார்.


மஞ்சந்தொடுவாய் சேர்ந்த 44 வயதுடைய குறித்த நபர் நீண்ட நாட்களாக  போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்ததாகவும் தற்போது ஹெராயின் மட்டும் ஐஸ் போதை பொருட்களை மாணவர்களுக்கு விற்பனை செய்து வருபவர் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து இரண்டு கிராம் மற்றும் 250 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் வினோபா இந்திரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 13-ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

No comments

Powered by Blogger.