Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக, நாமலை நிறுத்த யோசனை


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷவை நியமிக்க வேண்டும் என கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது.


மாத்தளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்டத் தலைவர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அவரது மகனும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனும் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.