Header Ads



பாதுகாப்பற்ற கடவையில் மோட்டார் சைக்கிளுடன், ரயில் மோதி இளைஞர் வபாத்


சிலாபம் - புத்தளம் ரயில் பாதையில் புலிச்சாகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற கடவையில் மோட்டார் சைக்கிளுடன் ரயில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


இச்சம்பவத்தையடுத்து, அப்பகுதி மக்கள் ரயிலை நிறுத்தி ரயில் தண்டவாளத்தை கடந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 


புளிச்சாகுளத்தை சேர்ந்த 19 வயதுடைய மொஹமட் அஸ்லம் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


விபத்தின் பின்னர் ரயில் புத்தளம் சென்று மீண்டும் சிலாபம் நோக்கி வந்துக் கொண்டிருந்த போது பிரதேசவாசிகள் புலிச்சகுளம் நிலையத்திற்கு அருகில் ரயிலை மறித்து நிறுத்தியுள்ளனர். 


 அங்கு, பாதுகாப்பற்ற ரயில்வே கடவை குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments

Powered by Blogger.