Header Ads



பாலம் இடிந்து விழ, ஓடையில் வீழ்ந்த லொறி -


எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில்    ஹு லந்த ஓயா பாலம் இடிந்து வீழ்ந்தமையால் போக்குவரத்திற்க்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.


மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி இன்று (05) காலை பாலத்தின் ஊடாகச் சென்ற நிலையில் குறித்த பாலம் இடிந்து வீழ்ந்துள்ளதோடு பாரவூர்தி ஓடையில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதன்போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலம் இடிந்து வீழ்ந்தமையினால் எம்பிலிப்பிட்டியவில் இருந்து மாத்தறை, பெலியத்த , தங்காலை நோக்கிக் செல்லும் வாகனங்களுக்குக் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.