Header Ads



மாணவியின் தவறான தீர்மானம்


முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை பிரதேசத்தில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராக இருந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்றைய தினம் (12) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


18 வயதுடைய மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


தூக்கிட்ட நிலையில் இருந்த சிறுமியை மீட்ட அயலவர்கள் புதுக்குடியிருப்பு ​வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


எவ்வாறாயினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது சிறுமி உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


சடலம் பிரேத பரிசோதனைக்காக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.