Header Ads



கொடிய முகவரான செல்போன்களை அணைக்குமாறு ஹிஸ்பொல்லா தலைவர் உத்தரவு


ஹிஸ்பொல்லா தலைவர் தனது போராளிகளுக்கு, அவர்களின் தொலைபேசிகளை அணைக்குமாறு  உத்தரவிட்டுள்ளார்.


கையடக்க தொலைபேசிகள் மூலம் இஸ்ரேல், கேமராக்களை இயக்கி, தமது இருப்பிடங்களை அறியமுடியும் என்பதாலே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,


 சில சமூக ஊடக தளங்கள், எதிரிக்கு இலவச தகவல்களை வழங்குவதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்


எமது எதிர்ப்பைக் குறைக்க, எதிரி சமூக ஊடகத் தகவலைப் பயன்படுத்திக் கொள்கிறான் மற்றும் செல்போன்களில் கேட்கிறான்


 செல்போன் சாதனங்கள் மூலம் அனுப்பப்படும், தகவல்களில் கவனமாக இருக்க வேண்டும்


 இந்த கட்டத்தில் செல்போன்களை அணைக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். அவை 


 இணையத்துடன் இணைக்கப்பட்ட கேமராக்கள் எதிரிக்கு மிகப்பெரிய சேவையை வழங்குகின்றன,  எனவே இந்த போரில் அவை அணைக்கப்பட வேண்டும்


 எதிரி முதன்மையாக தொழில்நுட்ப உளவு திறன்கள் மீதான தாக்குதல்களில் நம்பியிருக்கிறான் எனவும் ஹிஸ்பொல்லா தலைவர்  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.