Header Ads



பிரதமர் வேட்பாளராக பசில்..?


 எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறங்குவார் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு பசில் ராஜபக்ச அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து வரவுள்ளதாக ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினர் வீரதுங்க தெரிவித்துள்ளார்.


சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவிடம் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலை அல்ல பாராளுமன்ற தேர்தலே முதலில் நடத்தப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.


2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05ஆம் திகதி பசில் ராஜபக்ச இலங்கைக்கு வரும் போது அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்படும் என்றும், வாகன அணிவகுப்பு அவரை கொழும்புக்கு அழைத்து வரும் என்றும் அவர் கூறினார். 

1 comment:

  1. இந்த நாட்டைச் சூறையாடிய மாபெரும் கள்ளனும், நாட்டைப் பொருளாதார ரீதியாக இந்த வீழ்ச்சிக்குக் காரணம் நாட்டின் மத்தியவங்கி, திறைசேரி, அமைச்சுக்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிருந்த பொதுமக்களின் பணம் கோடான கோடியைச் சுருட்டிக் கொண்டு அமெரிக்காவுக்கு தப்பியோடிய இந்த படுகள்ளனைச் சுற்றியிருக்கும் அத்தனை கள்ளன்களையும் உடனடியாக நீதிமன்றத்தில் முன்நிறுத்தி நிரந்தர சிறையில் அடைத்து உரிய தண்டனை கொடுக்கும் வரை இந்த நாட்டுக்கு ஒருபோதும் விடிவு இல்லை என்பதை இந்த நாட்டில் வாழும் பொதுமக்கள் அனைவரும் அதற்கேற்ப செயல்படும்வரை முன்னேற்றப் பாதை பக்கம் திரும்பிப் பார்க்கவும் முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.