Header Ads



தாயின் மரணத்தை தாங்க முடியாத மகன் மாரடைப்பால் உயிரிழப்பு


இந்துருவ பகுதியில் தாயின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத மகன் ஒருவர் மாரடைப்பால் உயிரிழிந்துள்ளார்.


தாயின் மரணத்தால் மிகவும் துயரமடைந்து காணப்பட்ட மகன் தாயார் உயிரிழந்து சில மணித்தியாலங்களில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 


இந்துருவ, அகாடகொட, கல்தரமுல்லையில் வசித்து வந்த 71 வயதுடைய ஏழு பிள்ளைகளின் தாயார் கடந்த 22ஆம் திகதி உயிரிழந்தார்.


இந்த நிலையில், அவரது மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத 47 வயதுடைய அவரது மகன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.


இவர் ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது.


மேலும், தாயாரின் மறைவினால் இவர் கடும் துயரமும், அதிர்ச்சியும் அடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.