Header Ads



பாதையை விட்டு விலகி, காணிக்குள் புகுந்த பேருந்து


யாழ்ப்பாணம் - தென்மராட்சி - A 9 வீதி, நாவற்குழி பகுதியில் இ.போ.ச பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது.


இந்தச் விபத்து  சம்பவம் புதன்கிழமை (14) பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றது.


A9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பேருந்து அதனை முட்டி தள்ளியதோடு பாதையை விட்டு விலகி காணிக்குள் புகுந்துள்ளதாக கூறப்படுகின்றது.


இதன் போது மோட்டார் சைக்கிளுக்கு சேதங்கள் ஏற்பட்டிருந்த போதிலும்  தெய்வாதீனமாக அதில் பயணித்த இருவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

No comments

Powered by Blogger.