Header Ads



தந்தை வீட்டில் மறைத்து வைத்த போதைப்பொருள், பாடசாலைக்கு சென்றமையால் 5 பேர் பாதிப்பு


குருநாகலை – மாதுராகொட பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் போதைமாத்திரையை உட்கொண்டதாக கூறப்படும் 4 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


இவர்களில் ஒரு மாணவர் தமது தந்தை வீட்டில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருளினை பாடசாலைக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அதனை சக மாணவர்களுடன் அவர் உட்கொண்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதுராகொட காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்

No comments

Powered by Blogger.