Header Ads



15 வயது சிறுமியை கடத்தி, தனது வீட்டில் வைத்திருந்த 17 வயது சிறுவன்


யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று , தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 


தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என  வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (18)   முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , அப்பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவனின் வீட்டில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , வீட்டிற்கு விரைந்து ,  சிறுமியை மீட்டுள்ளதுடன்  , சிறுவனை கைது செய்துள்ளனர்


மேலும் பொலிஸாரால்  , குறித்த  சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


எம்.றொசாந்த் 

No comments

Powered by Blogger.