Header Ads



கட்டாரில் இலங்கையர் உயிரிழப்பு, நாட்டிற்கு வந்த உடல்


தொழில் நிமித்தம் வெளிநாடு சென்ற யாழ். இளைஞன் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.


வெளிநாடு வெறும் 26 நாட்கள் மாத்திரமேயான நிலையில் யாழ்ப்பாணம் அல்வாய் மனோகரா பகுதியைச் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.


யாழ். நவக்கிரியை பூர்வீகமாகக் கொண்ட குறித்த இளைஞர் அல்வாய் மனோகரா பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரை மூன்று வருடங்களுக்கு முன்னதாகதிருமணம் செய்துள்ளார்.


இந்நிலையில் ஒரு பிள்ளையின் தந்தையான அவர் தொழில் நிமிர்த்தம் கட்டார் நாட்டுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த நிலையில், சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இறுதி கிரியைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.