Header Ads



காத்தான்குடி பொலிஸார் நடாத்திய யுக்திய போதையொழிப்பு சுற்றிவளைப்பு


- ரீ.எல்.ஜவ்பர்கான் -


64,000 மில்லி லீற்றர் கசிப்பினை பதுக்கி வைத்திருந்த இருவரை எதிர்வரும் நாளை  23ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எஸ் . தியாகேஸ்வரன் தியாகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.


நேற்று மாலை கல்லடி வேலூர் பிரதேசத்தில் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய யுக்திய போதையொழிப்பு சுற்றிவளைப்பின் போது குறித்த கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க தெரிவித்தார்.


60 மற்றும் 52 வயதுடைய நபர்களே கசிப்பு பதுக்கி வைத்திருந்த பெயரில் கைது செய்யப்பட்டவர்களாவர். ஒருவரிடருந்து 30 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும்மற்றவரிடமிருந்து 34 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பினையும் கைப்பற்றியுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.