Header Ads



ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட முடியாது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட முடியாது ஏன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் பொதுஜன பெரமுன இதுவரை தீர்மானிக்கவில்லை.  அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு குழுவினரில் இருந்து தெரிவு செய்யும். 


எனினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். இலங்கையின் தேர்தல் சட்டத்தின் படி மகிந்த ராஜபக்ச மீண்டும் போட்டியிட முடியாது.  


ஜனாதிபதித் தேர்தலில் போட்டயிடும் வேட்பாளர் தொடர்பில் பல பெயர்கள் இதுவரையில் முன்மொழியப்பட்டுள்ளன. யார் அந்த வேட்பாளர் என பார்ப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.